ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பு

அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி நிதி சேகரிப்பு சார்பான நிகழ்ச்சி நாடு முழுவதிலும் துவங்கியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொற்கோயில், அருள்மிகு சக்தி அம்மாவின் ஸ்ரீபுரம் பீடத்திலும் இந்த நிகழ்ச்சி அருள்மிகு சக்தி அம்மாவின் ஆசியோடு துவக்கி வைக்கப்பட்டது. சக்தி அம்மா, ஸ்ரீராமனின் பெருமையும் ராமர் ஆலயத்தின் அவசியத்தை குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தார்கள். மேலும் நிதி சமர்ப்பணத்தில் முதலாவதாக பீடத்தின் சார்பாக நிதி அளித்து துவக்கி வைத்தார்கள். இதில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிக்ஷத், ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.