ஸ்டாலின் அறிக்கை

தெற்கு திட்டை ஊராட்சிமன்ற தலைவி பட்டியலினத்தவர் என்பதால் தரையில் அமரவைக்கப்பட்ட புகைப்படமும், செய்தியும் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டாலின் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கடைசியாக, அதிமுக அரசு இதை அணுவளவும் அனுமதிக்கக்கூடாது என கூறியுள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு, தன் கட்சியினர் தான் காரணம், தன் கட்சியை சேர்ந்த துணை ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜும் உடந்தை என்பதை வசதியாக மறந்துவிட்டார்.

 எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு, மத்திய மாநில அரசுகளை குறைகூறுவது அவருக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.