வீரபாண்டிய கட்டபொம்மன் வாழக்கை வரலாறு சிறு குறிப்பு

வீரபாண்டிய கட்ட பொம்மன்

தமிழக சுதந்திரபோராட்ட வரலாற்றை பற்றியும் தமிழக வீரம் பற்றிப் பேசினால், உடனே  நினைவுக்கு வருபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்பட்ட இவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு நுற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழக  மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு உள்ளவரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தோடு, வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வாழ்க்கை வரலாறு சாதனைகளை காண்போம்.

தோற்றம்

ஆதிகட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியருக்கு 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மகனாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.

இளமைக்காலம்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை என்ற குமாரசாமி, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் உடன்பிறந்தோர் . பின்னர், கட்டபொம்மன் வீரஜக்கம்மாள் என்பவரை மணந்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்டபொம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790ம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார்.

ஆங்கிலேயர்களுடன் மோதல்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற சமயத்தில், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தின்  கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. எட்டயபுரம் ராஜாவிடம் இருந்து பாளையத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றனர் ஆகிலேயர்கள்.  இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், எதிர்த்து நின்றனர், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கும் வகையில்  பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தரப்பட்டது. எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்தத்தோடு கடுமையான, தண்டனையும் வழங்கினர்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,

நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?

வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் பணிபுரிந்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

எஞ்சிய அரண்மனை

 

புதுப்பிக்கப்ப அரண்மனை

போர்களத்தில்  

வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழ்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரத்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் கம்பெனி நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். பீரங்கிகளை கொண்டு நடைபெற்ற இந்த போரில் ஆறு நாட்களுக்கு பின்னர் கோட்டைமதில் உடைக்கப்பட்டு ஆங்கிலேய படைகள் உள்ளே நுழைந்தது. கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன்அங்கிருந்து தப்பி புதுக்கோட்டையில் உள்ள தனது நண்பரான புதுக்கோட்டை மன்னரிடம் அடைக்கலம் கோரினார். முதலில் கட்டபொம்மனை வரவேற்று அடைக்கலம் கொடுத்த புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் காட்டி கொடுத்ததால், ஆங்கில படைகள் அவரைக் கைது செய்தனர்.

இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள் 

கயத்தாறு பகுதியில் புளிய மரத்தடியில் நடந்த விசாரணையில் கட்டபொம்

 

மனை குற்றவாளியென்று தீர்ப்பளித்தனர்.  வெள்ளையன். தன் மீது சுமத்திய “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆகிரமிப்பளர்களான ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற பொதுமக்கள்  அனைவரின் மனதிலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

இறப்பு 

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் த

 

ளபதி பேனர்மேன் உத்தரவின்படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாற்றை, பலரும் நாடகங்களாகவும், திரைப்படமாகவும் எடுத்தனர். பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வைத்து  வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வைத்தார். இப்படத்தின் கதை வசனத்தை  சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி அவர்கள் எழுதினார். சிவாஜி அவர்களின் தோற்றமும், நடையும், குரலும், கம்பீரமும், வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே நம்கண் முன்னே கொண்டுவந்து காட்டியது. வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், அனைவருக்கும்  சிவாஜி கணேசன் அவர்களே இன்றும்  நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு, படத்தில் அந்தக் கதாபாத்திரரமாகவே வாழ்ந்து  காட்டியிருப்பார். சிவாஜியின் நடிப்பைப் வெளி நாட்டினரும் வியந்து பாராட்டும் விதமாக, எகிப்தில் நடைபெற்ற  சர்வதேச படவிழாவில், அவருக்கு விருது’ கிடைத்தது.

சிலை

 

மரியாதைகளும், நினைவுச்சின்னங்களும்

  • கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனாக நடித்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் தனது சொந்தசெலவில் இந்த சிலையை அமைத்துள்ளார். கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் நாவல்கள் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.
  • ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.
  • 1974 ல், தமிழக அரசு அவரது நினைவாக பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனின் புராதன கோட்டை அமைந்திருந்த இடத்தில் ஒரு புதிய கோட்டை ஒன்றை கட்டியது.   கோட்டையில்உள்ள பிரதான மண்டபம்  முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருக்கிறது . போரில் மரணம் அடைந்த ஆங்கிலேய சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.
  • அவரது பழைய அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் அகழ்வாராய்வு செய்யப்பட்டு இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
  • அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
  • கட்டபொம்மன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இருநூறாவது ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் தலையை  வெளியிட்டது.
  • இந்தியகடற்படையின் முதன்மையான தகவல்  தொடர்பு இணைப்பு  மையமாகக் கருதப்படும் நெல்லை மாவட்டத்தின் விஜயநாராயணபுரத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைதளத்திற்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என்று பெயரிடப்பட்டது.
  • 1997 வரை, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போதைய தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி மாவட்டங்கள்) அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
  • மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ மிக சிறப்பாக கொண்டாடுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் தன்னெழுச்சியுடன் போராடிய முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு நிறுவி  வருகிறது.

கட்டபொம்மனின் கோட்டை அமைந்துள்ள பஞ்சலங்குறிச்சிக்கு மிக அருகிலேயேதான் சுதந்திர போராட்டத்தில் தனது சொத்துகளை இழந்து கற்ற கல்வி தகுதியான வழக்கறிஞர் தகுதியையும் இழந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் கம்பெனி தொடங்கிய குற்றத்திற்காக ஆங்கிலேய அரசால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலும் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வ. உ. சிதம்பர பிள்ளை பிறந்த ஊரான  ஓட்டபிடாரம் என்ற ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.