திருமாவளவனுக்கு சேலை

தமிழகத்தில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. ஆனால், முஸ்லிம் இயக்கங்கள், திராவிட கட்சிகள், இடையூறு ஏற்படுத்துகின்றன. திருமாவளவனும்  ஹிந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்வதோடு, ஹிந்து மதத்தை பற்றி இழிவாக பேசி வருகிறார். பாரதத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறது பயங்கரவாத அமைப்பான ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’.  இந்த அமைப்பின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியினரோடு திருமாவளவன் கைகோர்த்துக் கொண்டு  செயல்படுகிறார். தொடர்ந்து, ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் இழிவாகப் பேசினால், திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை ஆதரித்து, நடைமுறைப் படுத்தி உள்ளது. ஆனால், அரசியல் லாபத்திற்காகவே ஸ்டாலின்  இவற்றை எதிர்த்து வருகிறார் என வேலூர் இப்ராகிம் கோவையில் அளித்த  பேட்டியில் கூறியுள்ளார்.