விவசாய போராட்டத்தில் பயங்கரவாதிகள்

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற விவசாய வன்முறை போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு, குடியரசு தினத்தில் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற ராமர் கோயில், கேதார்நாத் கோயில் மாதிரிகளை திட்டமிட்டே பயங்கரவாத கும்பல் தாக்கி உடைத்துள்ளது. காவலர்கள் முடிந்தவரை தடுத்தும் இவை சேதப்படுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல், குடியரசு விழாவில் பங்கேற்கவந்த பலர் செங்கோட்டைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை இந்த பயங்கரவாத கும்பல் மிரட்டியுள்ளது. வன்முறையை தடுக்க முற்பட்ட காவலர்களில் 400 பேர் இந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்துள்ளனர். யோகேந்திரபால், தர்ஷன்பால், ஹன்னான் மோளா, ஜக்மோகன் சிங் பாட்டியாலா போன்ற கம்யூனிச நக்ஸல்களும் இந்த வன்முறை போராட்டத்தை தூண்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.