விளையாட்டு பட்ஜெட்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஒலிம்பிக் திட்ட பிரிவு குழுவினருடன் பேசுகையில், ‘ஒலிம்பிக் போட்டியில் பாரதத்தின் சார்பில் பங்கேற்கும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒலிம்பிக் திட்ட பிரிவு  மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதில் 7 முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், விளையாட்டு வீரர்களின் செயல்பாடு குறித்து உண்மையாக மதிப்பீடு செய்தல், ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துதல், தேவையான மாற்றங்களை பரிந்துரைத்தல், விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் உதவியதா என்பதை ஆய்வு செய்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.