வாசகர் வட்ட நிகழ்ச்சியில் வீர வணக்கம்!

விஜயபாரதம் வாசகர் வட்டம், பாரத மாதா பூஜை குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஆகஸ்ட் 14,  2016 அன்று நடைபெற்றது. 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்  விஜயபாரதம் ஆசிரியர் வீரபாகு,  சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார்.

வ.உ.சி., சுப்ரமணிய சிவா, காந்திஜி, அம்பேத்கர், திலகர், நேதாஜி, வாஞ்சிநாதன் ஆகியோரின் தியாகங்களை நினைவு கூர்ந்த அவர், இந்த தேசம் பாதுகாப்பாக இருக்க அனைவரும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக இருக்க sangamவேண்டும் என்று வலியுறுத்தினார்.  நிகழ்ச்சியின் நிறைவில் ரக்ஷா பந்தன், பாரத மாதா பூஜை நடைபெற்றது. அத்துடன் சுவாமி விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி, நேதாஜி, காந்திஜி, அம்பேத்கர், வ.உ.சி., கட்டபொம்மன், பாரதியார், ஜான்சி ராணி, கொடி காத்த குமரன், பகத் சிங், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோருக்கும் சிறப்பஞ்சலி செலுத்தப்பட்டது.