வழி மாறிப்போன மாவோயிஸ்ட்டுகள்; அரசால் தற்போது வாழ்க்கை மாறுது

சத்தீஸ்கர், மாநிலம் தண்டேவாடாவில் 32 மாவோயிஸ்ட்டுகள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தி மீண்டும் பொதுவாழ்க்கையில் இணைவதற்காக காவல்துறையிடம் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர்.

இவர்களில் ஆறு பேரின் தலைக்கு விலை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை துவங்க உடனடி உதவியாக தலா 10000 ரூபாயை அரசு வழங்கியுள்ளது. இதுவரை 150 மாவோயிஸ்ட்டுகள் இதுபோல சரணடைந்துள்ளனர் என தண்டேவாடா காவல்துறை தலைவர் அபிஷேக் பல்லவா தெரிவித்துள்ளார்.