வருமானத்தை மறைத்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு கோர்ட் கிடுக்குப்பிடி

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதியை விடுவிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-16 ஆண்டிற்கான வருமானத்தை மறைத்ததாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனும் காங்., எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதியை விடுவிக்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும், ஜன.,21ல் இந்த குற்றச்சாட்டுக்கு ஆஜராக வேண்டும் எனவும், ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறபிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.