வருகிறதா புதிய சட்டம்?

பிரதமர் அலுவலக இணை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் வாயிலாக தமிழகத்தில் நடைபெறும் கோயில் நில ஆக்கிரமிப்புகள், அனுமதியற்ற விற்பனை, சிலை கடத்தல், அரசியல் தலையீடு போன்ற விவகாரங்கள், பொன். மாணிக்கவேல் திரட்டிய தகவல்கள் அனைத்தும் பிரதமரின் பார்வைக்கு சென்றுள்ளது. இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த பாரதத்திற்கு ஏற்ற வகையில் கோயில் சொத்து பாதுகாப்பு, நில விற்பனை, கோயில்கள் வருமானத்தை அதற்கே பயன்படுத்துதல் தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கவும், ஆளுனர், தலைமை செயலாளர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கட்டுப்பாட்டில் கோயில் சொத்துகள் பராமரிப்புக்கு வழிவகை செய்ய சட்ட திருத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.