வம்பும் வழக்கும்

இந்தியா டுடே நிர்வாக ஆசிரியர் ராஜ்தீப் சர்தே சாய் மீது உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் இடதுசாரி ஆதரவாளரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷண் உச்சநீதி மன்றத்திற்கு எதிரான கருத்துகளை ட்விட் செய்திருந்தார். அதற்கு நீதிமன்றம் 1 ரூபாய் அபராதம் அல்லது மூன்றுமாத சிறை தண்டனை விதித்தது. இதனை ராஜ்தீப் கிண்டலாக விமரிசித்திருந்தார். மலிவான விளம்பரத்திற்காக எழுதிய இவரது கருத்துகளே இவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் இதைப்போன்ற நீதிமன்ற அவமதிப்புகள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.