லடாக்கில் முகாமிடும் ராஜ்நாத் சிங்; இரு நாள் பயணமாக முப்படை தளபதியுடன் லடாக் சென்றார்

கடந்த சில தினங்களுக்கு முன் இரு நாள் பயணமாக பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று வீரர்களை சந்தித்து பேசினார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஜவான்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இரண்டு நாட்கள் பயணமாக லடாக்கில் உள்ள லே நகருக்கு இன்று (ஜூலை17) காலை தனிவிமானம் மூலம் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவாணே ஆகியோர் உடன் சென்றனர்.