ரியலும், ரீலும்

உயிர்காக்கும் மருந்துகளை குறைவான விலையில் கொடுக்க வேண்டும் என்ற சினிமா ‘தனி ஒருவன்’. இதை பாரத அரசு ‘ஜன் அவுஷதி’ திட்டமாக செயல்படுத்தி வருகிறது. ஏழைகள் வீடுகளில் கழிப்பறை வசதி வேண்டும் என சொன்னது ‘ஜோக்கர்’ திரைப்படம். இதை பாரத அரசு ‘ஸ்வச் பாரத்’ என எப்போதிலிருந்தோ செயல்படுத்தி வருகிறது. கறுப்பு பணம் ஒழிக்க வேண்டும் என்ற பல படங்கள் வந்துள்ளன அதில் சமீபத்தில் வெளியானது ‘பிச்சைக்காரன்’. பாரத அரசு இதை ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையாக செயல்படுத்தியுள்ளது. தற்போது ஏழைகளும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என கூறியுள்ள படம் ‘சூரரை போற்று’. இதை மோடி தலைமையிலான பாரத அரசு ‘உதான் திட்டம்’ என செயல்படுத்துகிறது.