மூன்று மாநிலங்களில் வரிவிலக்கு

சாம்ராட் பிரித்விராஜ் திரைப்படம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக நேற்று வெளியாகியுள்ளது. ராஜபுத்திர மன்னன் பிரித்விராஜ் சௌஹான் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ள இந்த படம் பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்ராட் பிருதிவிராஜ் படம் குவைத், ஓமன் நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மன்னன் பிருதிவிராஜ் படத்துக்கு குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.