முரசொலி மூலப்பத்திரம் எங்கே

கருணாநிதியை ‘நீங்கள் தமிழரா, நிரூபிக்க தயாரா’ என எம்.ஜி.ஆர் கேட்ட கேள்விக்கே இன்று வரை பதில் கிடைக்கவில்லை. இந்த சூழலில் திமுகவிடம் இருந்து பதில் கிடைக்காத கேள்வியாக வலம் வருகிறது பாமக தலைவர் ராமதாஸ் கேட்ட ‘முரசொலி மூலப்பத்திரம் எங்கே’ என்பது. இந்நிலையில் முரசொலி மூலப்பத்திர நகலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 லட்சம் பரிசு என ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் எஸ்.டி கல்யாணசுந்தரம் அறிவித்துள்ளதாக போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தலுக்கு முன்பாக மூலப்பத்திரத்தை காட்டி ஸ்டாலின் தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவமானத்தை துடைப்பாரா என சொந்த கட்சியினரே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.