கல்லறையை சுமக்கும் ஆர்மேனியர்கள்

முஸ்லிம் நாடான ஆஜர்பைஜானுக்கும் கிறிஸ்தவ நாடான ஆர்மேனியாவிற்கும் எல்லைகளில் போர் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த சூழலில் எல்லையில் உள்ள நகோர்னோ, கராபாக் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் தங்கள் மூதாதையரின் கல்லறைகளை அவமானப்படுத்துவார்கள் என்கின்றனர் இவர்கள். எனவே தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளைகூட பெயர்த்தெடுத்து செல்கின்றனர். ஆசையாக கட்டிய தங்கள் வீடுகளையும் எரித்துவிட்டு செல்கின்றனர்.