மின் வாரியத்திற்கு அறிவுறுத்தல்

மத்திய மின் துறை உயரதிகாரிகள், மின்சார வாகன சார்ஜிங் மையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக, தமிழக மின் வாரியம் உட்பட பல மாநில அதிகாரிகளுடன் இணையம் வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க ஏதுவாக, தேசிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ துாரத்துக்கு ஒரு வாகன சார்ஜிங் மையமும்; மாநகராட்சி பகுதிகளில் 3 கி.மீ துாரத்திற்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தினர்.