மக்களை குழப்பும் சிவசேனா

ஹிந்துக்களால் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது சிவசேனா. இதனால் ஹிந்துக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் இழந்துவிட்டது என்பது சிவசேனைக்கே நன்றாக தெரியும். அதனால் மக்களை குழப்பும் வகையில் தன் பத்திரிகையான சாம்னாவில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் மசூதிகளில் ஒலிப்பெருக்கியை தடை செய்ய மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என கூறியிருந்தது. உச்ச நீதிமன்றம் 18 ஜூலை 2005லேயே   கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவதை தடை செய்தது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அதைவிடுத்து, இதற்கு மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவது, மத்திய அரசின் நற்பெயரை கெடுக்க சிவசேனா செய்யும் நரித்தந்திரமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.