போர்க்கப்பலில் ட்ரோன்கள்

மடகாஸ்கரில் இருந்து மலாக்கா நீரினைப்பு வரையிலான இந்தியப் பெருங்கடலில், கண்காணிப்பை விரிவுபடுத்துவதற்காக, போர்க்கப்பலில் இருந்து இயக்கப்படும் 10 ட்ரோன்கள் வாங்க பாரத கடற்படை மத்திய அரசிடம் அனுமதி கோரியது. மத்திய அரசும் அனுமதி வழங்கி 1300 கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கியுள்ளது. முன்னதாக, இதற்கு அமெரிக்காவிடம் இருந்து 30 மணி நேரத்திற்கும் மேலாக பறந்து கண்காணிக்கும் திறன் மிக்க இரண்டு பிரிடேட்டர் ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. மேலும் காமோவ்-31 வானூர்திகளும் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இனி இந்த டிரோன்களால் பாதுகாப்பு பலப்படும்.