தி ஒயர் – ஒரு சார்பு ஊடகம்

தீவிர இடதுசாரி ஆதரவு ஊடகமான தி ஒயர், சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது. அதில் ‘மத்தியபிரதேசம், கிஷன்பூரை சேர்ந்த தேவ்ராஜ் எனும் பட்டியல் பிரிவை சார்ந்த ஒருவர் உயர்சாதியினரின் தட்டுகளை தொட்டுவிட்டார் என்பதால் அவரை அபூர்வா சோனி, சந்தோஷ் பால் ஆகியோரால் அடித்துக்கொல்லப்பட்டார்’ என ஜாதீய ரீதியில் செய்தியை திரித்து வெளியிட்டிருந்தது. ஆனால் உண்மையில் அது தட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தேவராஜ், சந்தோஷ் பாலின் சகோதரியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் நடைபெற்ற சண்டையில் தேவராஜ் இறந்துள்ளார்.
இதேபோல மற்றொரு சம்பவத்தில் உத்தரபிரதேசம், மல்வான் பகுதியை சேர்ந்த திராம்பால் திவாகர் என்ற பட்டியல் சமூக இளைஞன் மாமர இலைகளை தன் ஆடுகளுக்கு உணவளிக்க பறித்திருக்கிறார். இதனையடுத்து நூர் முகமது, சல்மான் ஆகியோர் அவனை தாக்கியுள்ளனர். அவமானம் தாங்காமல் திராம்பால் தற்கொலை செய்துகொண்டான். ஆனால் இந்த சம்பவத்தில் தி ஒயர் முஸ்லிம்கள் ஈடுபட்டதை திட்டமிட்டு மறைத்துவிட்டது.