போராடினால் சட்டம் பாயும்

பாரத அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டம் உட்பட வேறு எதற்கும் இங்கு போராடக்கூடாது. மீறி போராட்டம் நடத்துதல், சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடுதல் செய்வோர் மீது கடுமையான சட்டம் பாயும், கைது நடவடிக்கை, அபராதம், வேலை பறிபோதல், நாட்டில் நுழைய நிரந்தரத்   தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் அதிகாரிகளின் அனுமதி பெறாமல் போராட்டங்கள், பேரணி, அரசியல் அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பது கூடாது. எந்த ஒரு நாடு, இனம், மொழி, மக்களை புண்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உள்நாட்டு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது