பொன் மாணிக்கவேல் தலைமையில் கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை தமிழகம் வந்தது

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் ஆஸ்திரேலியாவிலிருந்து கள்ளிடைகுறிசி பஞ்சலோக நடராஜர் சிலை தமிழகம் வந்தது. இந்த சிலையானது எழுநூறு ஆண்டுகள் பழமையானது என்றும் குலசேகரமுடையார் கோயிலில் 25.7 செ.மீ உயரமுள்ள பஞ்சலோக நடராஜர் சிலை இருந்தது என்றும் இந்த சிலை 1982 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் அருங்காட்சியத்தில் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு 30 கோடியாகும் என்று அரசு தெரிவித்துள்ளது