பெகாசஸ் முடக்கம்

பெகாசஸ் உளவு மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக உலகெமெங்கும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அதனை என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேல் அரசு அதிகாரிகள் விசாரனை நடத்தினர். இந்த நிலையில் இது குறித்து மேலும் விசாரிக்க ஏதுவாக அந்த மென்பொருளை யாரும் பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் வாடிக்கையாளர் விவரங்களை வெளியிட இஸ்ரேல் பாதுகாப்புக்குழு தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து எந்த நாட்டின் வாடிக்கையாளர்கள் முடக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி தெரிவிக்கப்படவில்லை.