பூமி காக்க மரம் நடுவோம்

தமிழர்கள் இடையே மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் மரம் தங்கசாமி. புதுக்கோட்டையை சேர்ந்த இவர் இதற்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர். அவரின் சேவையை நினைவு கூறும் விதமாக ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த செப்.14, 15, 16 தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தியது. இதில் 331 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களில் தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு உள்ளிட்ட 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர். காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு, கர்நாடகாவில் இதுவரை சுமார் 83 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது.

விளம்பரத்திற்காக மரம் நடுவோர் மத்தியில் பூமி காக்க உண்மையாகவே மரம் நட்டு பராமரிக்கும் இவர்களை வாழ்த்தலாமே.