புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சூடு

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவந்திபுராவின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த பயங்கரவாதியுடன் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

அவனிடமிருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதி குறித்த தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர