பீதியை கிளப்பும் பாகிஸ்தானிய பிரபலம்

கொரோனா தடுப்பு மருந்தை போடாதீர்கள். இதன் மூலம் அமெரிக்காவும், பில்கேட்ஸும் உலக மக்களை அடிமைபடுத்தி விடுவார்கள். முஸ்லிம் மக்கள் தொகையை அவர்கள் குறைக்க முயற்சிக்கின்றனர் என பாகிஸ்தானிய தொலைக்காட்சி பிரபலம் ஜெய்த் ஹமீத் கூறியுள்ளார். இவர் அடிக்கடி இது போன்ற பல சர்ச்சைக்குரிய வகையில் பேசுபவர். தன்னைவிட சிறந்த முஸ்லிம் உலகில் இல்லை எனவும் ஒருமுறை கூறியுள்ளார். ஒருமுறை இவருக்கு வாரத்திற்கு 50 கசையடி என பல வாரங்களுக்கு தண்டனை கொடுத்திருந்தது சௌதி அரசு. ஆயினும் இவர் திருந்துவதாக தெரியவில்லை.