பி.எப்.ஐ, எஸ்.டி.பி.யினர் கைது

காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் முகநூலில் சர்ச்சைக்குறிய பதிவிட்டார் என கூறி, சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் பயங்கரவாதிகளால்  பெங்களூருவில் திட்டமிட்ட பெருங்கலவரம் நிகழ்த்தப்பட்டது. இதில் 60 காவலர்கள் படுகாயமுற்றனர், இரண்டு காவல்நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான பொதுமக்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இது சம்பந்தமாக, பயங்கரவாத ஆதரவு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பான  அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 17 பேரை என்.ஐ.ஏ அமைப்பு சமீபத்தில் கைது செய்தது. இது சம்பந்தமாக இதுவரை 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.