பாகிஸ்தான் கோஷம்

டெல்லி காவல்துறையினருக்கு, டெல்லி, கான் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் சுமார் 1 மணியளவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும் அவர்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு விரைந்த காவல்துறையினர், கோஷங்களை எழுப்பிய 2 ஆண்கள், 3 பெண்களையும் கைது செய்தனர். கோஷம் எழுப்பியவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.