பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக போடப்பட்ட சீனாவின் திட்டம் தவிடுபொடி

கடந்த ஜூன் 29 ல், பாகிஸ்தானின் கராச்சி நகரின் சந்திரகர் சாலையில் பாகிஸ்தானின் பங்குச்சந்தைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் என தெரிவித்திருந்தனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் சீனா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், உதவி செய்தவர்கள், ஆதரவு அளித்தவர்களை இந்த சபையின் உறுப்பு நாடுகள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சர்வதேச சட்டப்படியும், ஐ.நா., தீர்மானத்தின்படியும், அனைவரும் பாகிஸ்தான் அரசு மற்றும் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுடன் , தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனமும் இரங்கலும் தெரிவித்திருந்தது.

இதனை நியூயார்க் நேரப்படி மாலை மணி வரை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த தீர்மானம் நிறைவேறிவிடும். ஆனால்,திடீர் திருப்பமாக மாலை 4 மணிக்கு, இந்ததீர்மானத்திற்கு ஜெர்மனி தடை போட்டது. இது தொடர்பாக தூதரக அதிகாரிகள் கூறுகையில், தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவை , குறைகூறும் பாகிஸ்தான் செயல் ஏற்று கொள்ள முடியாது எனக்கூறி தடை போட்டது.