பதற்றமான நிலையில் லடாக் எல்லையில் பிரதமர் நேரடி ஆய்வு.

சீனா,இந்தியா நாடுகளிடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இந்த நிலையில், லடக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். ராணுவ பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றை ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்தார். பிரதமர் மோடியுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் உடன் இருந்தார்.