பாகிஸ்தானிய குட்டு வெளிப்பட்டது

பாரதத்தில் காலிஸ்தான், முஸ்லிம்கள், நாகாலாந்து பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, நிதியுதவி, ஆயுதங்கள் கொடுத்து தூண்டிவிடுவது பாகிஸ்தான்தான் என அந்த நாட்டு ARY என் செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது. அவர்களின் ‘ஆஃப் தி ரெகார்ட்’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி, PMNL கட்சி தலைவர் மிப்தா இஸ்மாயில், நிகழ்ச்சி நெறியாளர் காஸிப் அப்பாஸி ஆகியோர் பேசும்போது, பலுஸிஸ்தான் பிரச்சனை, காஷ்மிர் போன்ற விவாதங்கள் இடம் பெற்றன. அப்போது நடைபெற்ற சூடான வாக்குவாதத்தில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.