பழங்குடியினத்தவரை கொன்ற 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள தாந்தோணி பகுதியில், பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரத்தைச் சேர்ந்த, பழங்குடியினத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், 55, மற்றும் குமார், 45, ஆகியோர், குருவி வேட்டைக்குச் சென்றனர். அவர்கள் கோழி திருட வந்ததாகக் கூறி, தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்து, கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒரு கும்பல் தாக்கியது. இதில், செங்கோட்டையன் பலியானார். குமார் படுகாயம் அடைந்தார்.

கொலை வழக்கு, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடுமலை டி.எஸ்.பி., சுகுமாரன் தலைமையிலான தனிப்படையினர், தாந்தோணியைச் சேர்ந்த செல்வகுமார், 33, சசிகுமார், 39, செல்லத்துரை, 25, ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சிலரை தேடி வருகின்றனர்