பயத்தில் இம்ரான்கான்

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத வலிமையான அரசு தற்போது பாரதத்தில் அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள வலிமையான அரசால் நமக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. எனவே நாம் நம் ராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒரு பேரணியில் பேசியுள்ளார். இது 92 எனும் செய்தி தொலைகாட்சி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தான் இன்றைய பலம் கொண்ட பாரதத்தையும் அதன் ராணுவ பராக்கிரமத்தையும் கண்டு அஞ்சுவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.