பத்திரிகையாளர் கொலையில் ஜிஹாதிகள் தொடர்பு

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பிகாரில் மணீஷ் குமார் சிங் என்ற சுதர்ஷன் தொலைக்காட்சி நிருபர் கொல்லப்பட்டார். அவரது உடல் ஒரு நீர் நிலையில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டது. இது தொடர்பாக, முகமது அர்சாத் ஆலம், அமரேந்திர சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சுதர்சன் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சாவன்கே எழுதியுள்ள கடிதத்தில், ‘பங்கா மசூதி குண்டு வெடிப்பு, தர்பங்கா பார்சல் குண்டு, சிவான் குண்டுவெடிப்பு ஆகிய மூன்று ஜிஹாதி குண்டு வெடிப்புகள் குறித்து மணீஷ் குமார் சிங் புலன்விசாரணை செய்துவந்தார். இதனால் அவருக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமானது. அவரது விசாரணையை தடுக்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம். அவருக்கு மட்டுமல்ல, சுதர்ஷன் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஜிஹாதி அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன’ என தெரிவித்தார்.