பண்டிட் மதன் மோகன் மாளவியா

மதன்மோகன் மாளாவியா, அரும்பாடு பட்டு பல லட்சம் ரூபாய் நிதியை திரட்டி உலகப்புகழ் பெற்ற பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றார். எனினும் காந்தியின் முஸ்லிம்களின் கிலாபத் இயக்க ஒத்துழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். செளரி சௌரா காவல் நிலைய எரிப்புச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரை வாதாடி மீட்டார். காந்தி – அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் முக்கியப் பங்காற்றினார் மாளவியா.
பண்டிட் மதன் மோகன் மாலவியாவின் பிறந்த தினம் இன்று.