கார்கில் நாயகன் வாஜ்பாஜ்

பொக்ரான் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி அணு ஆயுத வல்லரசாக பாரதத்தை மாற்றியவர் வாஜ்பாய். இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொலைதொடர்பு கொள்கை பாரதத்தின் தொலைதொடர்பு வளர்ச்சியை 3%ல் இருந்து 70%த்திற்கு உயர்த்தியது.  அவரின் ‘சர்வ சிக்ஷா அபியான் திட்டம்’ கல்விதுறையில் செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றம். டெல்லி – லாகூர் இடையே முதல் மக்கள் போக்குவரத்து துவக்கி முதல் ஆளாக பயணித்தார் அடல்ஜி. தங்கநாற்கர திட்டத்தில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கினார். பழங்குடி சமூக நலன், சமூக நீதி அமைச்சகம், வடகிழக்கு பகுதிக்கு தனித் துறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்பாய்.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று.