பண்டிட் கேதார்நாத் வியாஸ்

ஞானவாபி வளாகம் விஸ்வநாதர் ஆலயம் மஸ்ஜித் அல்ல என்பதை நிலை நிறுத்திட நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர். எண்ணற்ற ஆதாரங்களை திரட்டி ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திட அரும் பாடுபட்டவர் பண்டிட் கேதார்நாத் வியாஸ். 15 ஆகஸ்ட் 1947 அன்று எந்த ஒரு முஸ்லீமும் ஞானவாபி வளாகத்திற்குள் சென்று தொழுகை நடத்திடாமல் அவ்விடத்தை பாதுகாத்ததில் வெற்றி கண்டவர். கர்மயோகி பண்டிட் கேதார்நாத் வியாஸ் 2020ல் இறைவனடி சேர்ந்தார். பண்டிட் கேதார்நாத் வியாஸ் போன்ற எண்ணற்ற தேசபக்தர்கள் செய்துள்ள தியாகங்கள் கணக்கிலடங்காதது. அவர்களின் தியாகத்திற்கு நமது அஞ்சலிகள்.