நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

மேற்கு வங்கத்தில் ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான 16.5 கி.மீ தூரத்திலான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை என கூறப்படுகிறது.

 

இதன் சேவையை பிரதமர் மோடி (மார்ச் 6) கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி சிறுவர்கள் பலரும் இந்த மெட்ரோவில் பயணித்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடியும் பள்ளி மாணவர்கள் இடையே அமர்ந்து உரையாடியபடியே சென்றார்.