நாட்டு நாய்களுக்கு கிராக்கி

பிரதமர் மோடி, நாட்டு நாய் இனங்களின் பெருமை, அதை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆகஸ்ட் மாதத்தில் தன் மனத்தின் குரல் நிகழ்சியில் பேசியிருந்தார். அதனால் தற்போது கோம்பை, சிப்பி பாறை, கண்ணி, பில்லி குத்தா வகை நாட்டு நாய் இனங்களுக்கான மவுசு மக்களிடம் அதிகரித்துள்ளது. உதாரணமாக சிப்பிப் பாறை நாய் குட்டியின் விலை ரூ. 20,000 என்றும் அதனை வாங்க ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் இடர்களை சந்தித்த நாட்டு நாய் விற்பனையாளர்கள் தற்போது இதனால் மகிழ்ச்சியாக உள்ளனர்.