நாகபுரி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மே 8 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாடெங்கிலும் இருந்து 682 ஸ்வயம்சேவகர்கள் பயிற்சி பெற வந்துள்ளனர். முகாமின் ஒரு முக்கிய நிகழ்வாக, நகரில் ஒரு அணிவகுப்பு நடத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அவ்வகையில், தற்போது முகாமில் பங்கேற்றுள்ள ஸ்வயம்சேவகர்கள் சங்க சீருடை அணிந்து நாகபுரி நகரின் முக்கிய வீதிகள் வழியே கோஷ் இசை முழக்கத்துடன் இன்று அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பை, ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச் செயலாளர் ராம் தத் சக்ரதர், முகாம் அதிகாரி கிருஷ்ண மோஹன், முகாம் செயலாளர் திப்பே ஸ்வாமி, முகாம் சேவா பிரமுக் ஷிவ லஹரி, அகில பாரத சஹ சம்பர்க்க பிரமுக்  சுனில் தேஷ்பாண்டே மற்றும் ப்ரதீப் ஜோஷி, அகில பாரத பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், நாகபுரி சங்கசாலக் ராஜேஷ் லோயா ஆகியோர் பார்வையிட்டனர். நாகபுரி நகரில் பல இடங்களில் பொது மக்கள் மலர் தூவி அணிவகுப்பை வரவேற்றனர்.