நன்கொடை வழங்கிய நல்ல நெஞ்சங்கள்

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்ட இதுவரை சுமார் ரூ.100 கோடி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நன்கொடை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்த கதையை எனது மகளிடம் கூறினேன். இதே பாணியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நம்மால் முடிந்த நன்கொடையை வழங்க வேண்டும். நான் எனது நன்கொடை கடமையை நிறைவேற்றிவிட்டேன்.

நீங்களும் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்களால் முடிந்த வகையில் நன்கொடை வழங்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். நடிகை பிரணிதா தன் ட்விட்டரில் “ராமர்கோயில் கட்டப்படுகிறது. இதற்காக நானும் நன்கொடை வழங்கியுள்ளேன். நீங்களும் நன்கொடை வழங்கி ராமரின் ஆசி பெறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.