தேசதலைவருக்கு மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாள், வரும் ஜனவரி 23ல் கொண்டாடப்படுவதையொட்டி, இனி வருடம்தோறும், ஜனவரி பராக்ரம் திவஸ் எனப்படும் துணிச்சல் தினமாகக் கொண்டாடப்படும் என ககலாச்சார அமைச்சகம் கூறியுள்ளது. ரயில்வே  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1866 முதல் செயல்படும் கல்கா மெயில் இனி நேதாஜி எக்ஸ்பிரஸ்" என்று பெயர் மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 23 அன்று கொல்கத்தா, விக்டோரியா மெமோரியலில் நடைபெறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டம், கொல்கத்தா தேசிய நூலக தின நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.