தி.மு.க.வினரை நம்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் – பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்து வன்முறையை தூண்டிவிடும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்து தமிழக பா.ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் எம்.இப்ராஹிம் சிறப்புரையாற்றினார்.

முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், சென்னை கோட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, இணை செயலாளர்கள் ஜெய்சங்கர், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம், செயலாளர் சுரேஷ் கர்ணா, மாநில மீனவர் அணி தலைவர் சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன், 70 ஆண்டுகளாக காத்திருந்த ஒரு சட்டம் (குடியுரிமை திருத்த சட்டம்) இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, விடுதலைக்கு முன் இந்த நாட்டை பிளக்க அனுமதிக்கமாட்டோம் என்றார்கள். 1947-ல் நாடு பிரிக்கப்பட்டதற்கு அடிப்படையான ஒரே காரணம் இந்து, முஸ்லிம் என்ற மத அடிப்படைதான். உங்களோடு நாங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று ஜின்னா கூறிய காரணத்தால் உருவான நாடு பாகிஸ்தான்.

1950-க்கு பின்னர் இந்தியாவில் வாழ முடியவில்லை என்று ஒரு முஸ்லிம் கூட பாகிஸ்தானுக்கோ, வங்காளதேசத்துக்கோ சென்றது இல்லை. ஆனால், சுதந்திரத்தின்போது பாகிஸ்தானில் 20 சதவீதமாக இருந்த இந்துக்கள் 1½ சதவீதமாக குறைந்துள்ளனர். வங்காளதேசத்தில் இந்துக்கள் 23 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைந்துள்ளனர்.

நேரு பிரதமர் பதவி மீது கொண்ட ஆசையால் நாட்டின் எல்லைகளை கூட வரையறுக்காமல் பிரதமர் ஆனார். பிரதமர் நரேந்திர மோடி இப்போது சீனாவுடன் எல்லை வரையறை செய்ய பேசிக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் செய்த தவறை சரிசெய்து கொண்டு இருக்கிறார். கடந்தமுறை மோடி தலைமையிலான ஆட்சி காலத்தில் வங்காளதேசத்துடன் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சி காலத்தில் காங்கிரஸ் துணையுடன் இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக சுட்டு கொல்லப்பட்டனர். மாணவர்களே! இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தாளமுத்து, நடராஜன் என்று பெயர் வைத்தார்களே தவிர ஒரு குடும்பத்தை கூட தி.மு.க. வாழ வைத்தது கிடையாது. அதாவது உங்களின் அப்பா, தாத்தாக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். 3-வது தலைமுறையாக கல்லூரியில் படிக்கும் நீங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

எனவே அவர்களை (தி.மு.க.) நம்பி போராட்டத்தில் ஈடுபடாதீர்கள். தி.மு.க.வினருக்கு தமிழர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அக்கறை கிடையாது. தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் பிரச்சினை ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் சாதி, மத பிரச்சினைகளை எழுப்புவார்கள். இப்போது அவர்கள் உள்ளாட்சி தேர்தல் மூலம் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற நினைக்கிறார்கள். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒரே கட்சி பா.ஜனதாதான். இவ்வாறு அவர்