திருப்பள்ளியெழுச்சி 9

விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மிகச் சிறந்த விழுப்பொருளாக விளங்குபவன் சிவபிரான். அத்தகைய உயர்ந்த அரிய பொருள் மண்ணுலகில் வாழும்

தொண்டர்களுக்காக எளிமையாக இறங்கி வந்து அருள்செய்து வாழவைக்கிறான். திருப்பெருந்துறை என்கிற திருத்தலம், நிலவளம், நீர்வளம் இவற்றோடு உலக உயிர்கள் அனைத்தையும் அருள் பெற வைக்கும் திருத்தலம். பரம்பரை பரம்பரையாக அவனது திருக்கோயிலை வலம் வந்து பரமனுக்கே பணிவிடைசெய்யும் அடியவர்களின் உயிரில் கலந்து தேனாக இனிக்கிறான் அத்திரியம்பகன். அளவற்ற அருளின் பரப்பினைக் காட்டும் (நீலமணிமிடற்றான்) அவனை அணுகும் அடியவர்தம் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவன். அவனே இந்த உலகின் உயிர். “எம்பெருமானே! பள்ளி எழுந்தருளாயே!” என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.

 ஆர் கிருஷ்ணமூர்த்தி