தமிழகம் – இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ.க வெற்றி

தமிழகத்தில் பா.ஜ. இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடித்துள்ளது.

தமிழகத்தில் 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ. தனித்து போட்டியிட்டது. அப்போது இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும், 29 ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இம்முறை அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. தேர்தலில் ஆறு மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் 87 ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 31 ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது பா.ஜ. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் காங்கி ரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக ளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. 2 மாவட் டங்களிலும் போட்டியிட்ட 36 வார் டுகளில் 15 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 214 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களுக் கான தேர்தலில் அதிமுக 167 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சி களான பாட்டாளி மக்கள் கட்சி 10 இடங்களிலும், தேமுதிக 22 இடங் களிலும், பாரதிய ஜனதா கட்சி 16 இடங்களிலும் போட்டியிட்டன. திமுக 191 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 11, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், மதிமுக |2 இடங்களிலும் போட்டியிட்டன. அமமுக 193 இடங்களிலும் போட்டி யிட்டது.

இதில் திமுக 108 இடங்களிலும், அதிமுக 70 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தி லும், பாரதிய ஜனதா கட்சி 8 இடங் களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 3 இடங்களிலும், அமமுக 2 இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளன. 18 இடங்களில் சுயேச்சை வேட்பாளர் கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜகவில் எழுச்சி

பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து வேதாரண்யம் அடுத்த மரு தூர் (வடக்கு) வார்டில் வெற்றி பெற்றுள்ள ராஜ்குமார்,

நான் 8-ம் வகுப்புதான் படித்துள்ளேன். விவசாயம் செய்து வருகிறேன். நான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடியால் பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதன் அடையாளம்தான் என் வெற்றி. மேலும் மாற்று வேட்பாளர் மீது வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்தியும் என் வெற்றிக்கு காரணம். முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம் என்னுடன் வாக்கு சேகரித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

ஞ்சையில் 7-ல் வெற்றி

இதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.