டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடில்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.,, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

டில்லி சட்டசபையை மீண்டும் கைப்பற்றும் விதமாக மத்தியில் ஆளும் பா.ஜ., வின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் பல்வேறு மாநில முதல்வர் என ஏராளமானோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் குறித்து கட்சியினர் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பங்கு பெற உள்ளார். இதன்படி, முதல் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 2 மணியளவில் கிழக்கு டில்லி பகுதியான கார்கர்டோமா பகுதியை சேர்ந்த சிபிடி மைதானத்தில் நடைபெற உள்ளது. மற்றொரு பேரணி நாளை (4 ம் தேதி) நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.,முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.