டாக் பே செயலி

அஞ்சலகத்துறையின் வங்கியான ‘ இந்தியா போஸ்ட் பேமண்ட்    வங்கி’ டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனைக்காக ‘டாக் பே’ என்ற ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய தகவல் தொடர்பு, தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த சேவையை துவங்கி வைத்தார். பொதுமுடக்கக் காலத்தில் நேரடியாகவும் டிஜிட்டலிலும் தபால்துறை சேவைகள், மக்களை சென்றடைய தொழில்நுட்பங்கள் உதவி புரிந்தன.