ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர்அனுப்பப்படுகிறது விரைவில் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தினசரி அனுப்பப்படும்

சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான  குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டு தமிழக அரசு  உத்தரவின்  பேரில்  ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 1 கோடி லிட்டர் குடிநீரை ரயில் வேகன்கள் மூலம் கொண்டு வர  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ரயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டு 25 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி, குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரயில் கடந்த 12ம் தேதி புறப்பட்டது. அடுத்த நாள்  முதல்  கூடுதல் ரயில்கள் மூலம் தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு செல்லும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், கடந்த 5 நாட்களாக தினசரி ஒரே ஒரு ரயிலில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது., கூடுதலாக ரயில் இயக்கப்படாததால், தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது..

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழக அரசு உத்தரவுப்படி சென்னைக்கு ரயில் மூலம் குடிநீரை அனுப்புகிறோம். இதற்காக, ஜோலார்பேட்டையை அடுத்த பார்ச்சம்பேட்டை 5வது யார்டில் 45 தொழிலாளர்கள் குடிநீரை ரயில் வேகன்களில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயிலில் 4 மணிநேரத்துக்குள் குடிநீரை நிரப்புகிறோம். மாலை 5.30 மணிக்கு ரயில் சென்னைக்கு புறப்படுகிறது. அங்கு இரவு 11 மணியளவில் சென்றடையும் ரயிலில் இருந்து தண்ணீரை இறக்க 4 முதல் 5 மணிநேரம் ஆகிறது. அதன்பிறகு மறுநாள் காலை மீண்டும் ஜோலார்பேட்டைக்கு வருகிறது. கூடுதல் ரயில் இருந்தால் முதல் ரயில் புறப்பட்ட சில மணிநேரத்தில் 2 வது ரயிலில் தண்ணீரை நிரப்ப சென்னைக்கு அனுப்பி  வைக்க. முடியும் ஆனால், ரயில்வே நிர்வாகம் அதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை. எங்களை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் குடிநீரை சென்னைக்கு அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். ரயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்’’ என்றார்.

ரயில்வே அதிகாரி விளக்கம்: இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரி கூறுகையில் ஜோலார்பேட்டை – சென்னை ரயில்வே வழித்தடத்தில் 24 மணி நேரமும் பயணிகள், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் வந்து செல்கின்றன.. இதற்கான நேரமைப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம் குடிநீர் ஏற்றிச் செல்லும் ரயிலை விரைவாக இயக்கமுடியாது. மிதமான வேகத்தில் இயக்கப்படுவதால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வர காலதாமதம் ஏற்படுகிறது. ஓரிரு நாளில் 2வது ரயில் ஜோலார்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த 2 ரயில்கள் மூலம் தினசரி காலை 7 மணி, பிற்பகல் 12 மணி, மாலை 4 மணி, இரவு 8 மணி என ஒரு நாளைக்கு 4 முறை ரயிலில் குடிநீர் எடுத்துச்செல்ல நேரம் ஒதுக்கப்படும்’’ என்றனர்.

முன்னதாக ரயில் வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீரை 2முதல் 3 மணி நேரத்தில்  வேகன்களில் ஏற்றிவிடுவோம் என்று குடிநீர் வாரியதரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது  4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. இதனால், ரயில் புறப்படும் நேரத்தை திட்டமிட முடியவில்லை என்று ரயில்வே துறையினர்  தெரிவிக்கின்றனர் . அதே நேரத்தில், தண்ணீரை நிரப்பும் பணியை விரைந்து முடிக்க தொழிலாளர்கள் பழக்கப்பட சில நாட்கள் ஆகும்  என்பதால் ஓரிரு நாட்களில் இந்த பிரச்சனை சரியாகும்  என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்