சூரப்பா மீது விசாரணை

‘சூரப்பா அரசுக்கு வளைந்து கொடுக்கவில்லை. அவரை வைத்து சம்பாதிக்க முடியவில்லை. ஒரு அனாமதேய கடிதத்தை வைத்து அவர் மீது களங்கம் சுமத்துகின்றனர். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணில் அப்படி யாரும் இல்லை. அந்த முகவரியும் பொய்யானது. பேரசிரியர் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கினார் என்பது பொய். அவரது காலத்தில் நியமனங்களே நடைபெறவில்லை. இந்த விஷயத்தில் ஸ்டாலினின் தலையீடு தேவையில்லை. ஆளுனரின் முடிவே இறுதியானது’ என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.