சுவாமி சொரூபானந்தர் சித்தியடைந்தார்

மதுரை பேச்சியம்மன் படித்துறை சிவானந்த சத்சங் பவன் சுவாமி சொரூபானந்தர் நேற்று சித்தியடைந்தார். இவர் சிவானந்த ஆசிரமத்தில் சன்னியாசியாக தீட்சை பெற்றவர் மதுரை ஆஸ்டின்பட்டி சிவானந்த வித்யாலயா பள்ளியின் தாளாளராக இருந்தார். அருமையாக பகவத் கீதை சொற்பொழிவை ஆற்ற வல்லவர் இவர். இவருடைய பூர்வாசிரம சகோதரர்கள் சுவாமி விமலானந்தர் மற்றும் தோப்பூர் சிவானந்த தபோவனத் தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்தர் ஆகியோர். இவரது மற்றொரு சகோதரர் பொறியாளர் டீ.கே ராமன். சுவாமிஜியின் பூதவுடலுக்கு திருவேடகம் ராமகிருஷ்ண தபோவனம் சுவாமி பரமானந்தா, மதுரை சின்மயா மிஷன் பூஜ்யஸ்ரீ சுவாமி சிவ யோகானந்தா ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.